முல்லைத்தீவுப் பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்தச் சடலத்தைப் பார்வையிட்ட நீதிவான் ஆர்.பிரபாகரன் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அதனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார்.மலையகத்தைச் சேர்ந்த இராசையா லக்ஸ்மன் (வயது35) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
மாங்குளம் சந்தியிலுள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த இவர் ஏழு நாள்களுக்கு முன்னர் காணாமற்போயிருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் உறவினர்களால் இது வரை பொறுப்பேற்கப்படாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக