கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 31 மே, 2011

பிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசதி

நமது வலைப்பதிவு வேகமாக திறக்கும்படி அமைத்து இருந்தால்தான் வாசிப்பவர்கள் விரும்புவர். சில வலைப்பதிவுகள் திறக்க நேரம் பிடிக்கும் போது அவற்றை வாசிக்காமல் / தொடர்ந்து செல்லாமல் விட்டு விடுவதுண்டு. அணுகுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும்.

நாம் எவ்வளவுதான் சிறப்பாக எழுதி வந்தாலும் நமது வலைப்பதிவின் வடிவமைப்பு சரியில்லாமல் இருந்தால் / திறக்க அதிக நேரம் பிடித்தால் வாசிப்பவர் நமது தளத்திற்கு தொடர்ந்து வருவதை விரும்ப மாட்டார். RSS செய்தியோடை போன்ற மாற்று வழிகளில் வாசிப்பார். அல்லது வாசிப்பதை நிறுத்தி விடுவார்.

பேஸ்புக்கில் பழைய பொட்டோ வியூவரை மீண்டும் செயற்படுத்துவதற்கான புதிய முறை


நண்பர் ஒருவரின் பேஸ்புக் கணக்கில் அவரது படங்களை பார்க்கும் பக்கத்தில் முதலில் கறுப்பு நிறத்தில் பேக்கரவுண்ட் நிறத்தை மாற்றியது பேஸ்புக், பின்னர் வெள்ளை நிறம் என தொடரந்து மாற்றங்களை செய்து வருகின்றது.
எனினும் இந்த மாற்றங்கள் எதையும் விரும்பாதவர்கள் பழைய லைட் பாக்ஸ் எபெக்ட் இல்லாத போட்டோ வியூவரை விரும்புவர்கள் இலகுவாக அதை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

அதற்கு பேஸ்புக்கில் படத்தை திறந்து விட்டு குறிப்பிட்ட பக்கத்தை ஒரு முறை Refresh செய்துவிட்டால் சரியாகிவிடும்.

அல்லது படத்தை திறந்ததும் ஒரு முறை கீபோட்டில் f5 கீயை அழுத்தினால் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.

வியாழன், 26 மே, 2011

கணணியில் USB PORT-யை மறைப்பதற்கு

USB PORT அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USBனை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும்.
கணணியில் வைரசால் பாதிப்பு வந்து விடும் என்பதற்காக USB PORTனாது DISABLE செய்யப்பட்டு இருக்கும்.

புதன், 25 மே, 2011

நாய் குட்டியை ஈன்ற ஆட்டுக்குட்டி: சீனாவில் விசித்திரம்!

நாளுக்கு நாள் எம்மை நம்ப மறுக்கும் பல்வேறு விசித்திரங்கள் உலகில் எங்கோ ஓர் மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வரிசையில்சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது.

சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் உளவாளி இன்டர்நெட் !!!

 "உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு இன்டர்நெட் ஒரு உளவு இயந்திரமாக செயல்படுகிறது' என, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்காவுடனான சர்வதேச நாடுகளின் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.

சுவீடன் பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இவர் மீது, லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்களிடையே அசாஞ்ச் பேசியதாவது.

சச்சின், சானியா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு


தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கட் வீரர் சச்சின், மென்பந்தாட்ட வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விவரம்: இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் தனது பிறந்த நாளை 2010ம் ஆண்டு ஜமைக்கா நாட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது மூவர்ண கொடியின் நிறத்தினாலான கேக்கை வெட்டிக் கொண்டாடியது வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

செவ்வாய், 24 மே, 2011

தமிழ் எழுத்துப் பிழை திருத்தி


என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி..! இனிமேல் தமிழில் நாங்கள் விடுகின்ற எழுத்துப் பிழைகளைத் திருத்திய

அழகிரியைக் காணவில்லை: தமிழகத்தைக் கலக்கும் போஸ்டர்!

மு.க.அழகிரிக்கு எதிராக தமிழகத்தை ஒரு போஸ்டர் கலக்கிக்கொண்டு இருக்கிறது.மதுரையில் வீடியோ கடை நடத்தியது முதல் மத்திய அமைச்சரானது வரை முஇதனாலயே இவரது ஆதரவாளர்கள் கட்சியிலும்,அதிகாரத்திலும் இடம் பிடிக்க பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள்.

யாழ். சித்த மருத்துவ விடுதிக்குள் நுழைந்த திருடன் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம்!


யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை விடுதிக்குள் சென்ற திருடன்  மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பிடிக்க வேண்டிய நிலையேற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

ஞாயிறு, 22 மே, 2011

யுவதிகள் தூக்கில் தொங்கும் படலம் யாழில் தொடர்கின்றது -மீண்டும் ஒரு யுவதி மரணம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் லவண்யா (வயது 21) என்பவரின் சடலமே நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 மே, 2011

300 கம்பிகளை முகத்தில் குத்தியிருக்கும் மனிதன்(படங்கள் இணைப்பு)

300 கம்பிகளை முகத்தில் குத்தியிருக்கும் மனிதன் படங்கள் இணைப்பு

யாழ். ஊரெழு வாசியான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் உதவிப் பிரதமராக நியமனம்.

யாழ்ப்பாணம் ஊரெழு கிராமத்தை வழித்தோன்றலாகக் கொண்டவரும் சிங்கப்பூர் நாட்டின் பிரபல அரசியல்வாதியும் நன்கு உயர்கல்வி கற்று பொருளாதார நிபுணராக பிரகாசிப்பவருமான திரு தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் சிங்கப்பூர் அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய திரு தர்மன் அரசியலில் மட்டுமல் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியிலும் அதிக பங்கு வகித்தவர் என்று சிங்கப்பூரின் ஆங்கிலப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன.

ஒரு வருடகாலம் ஆண்வேடமிட்டு ‘கணவனாக’ வாழ்ந்த யுவதி


இந்தியப் பெண்ணொருவர் தன்னுடன் ஒருவருட காலம் கணவனாக குடும்பம் நடத்திய நபர்  உண்மையில் ஒரு பெண் என அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஓரிஷா மாநிலத்தின் ரூர்கேலா நகரைச் சேர்ந்த மீனாட்சி கஹதுவா எனும் 26 வயது  பெண்ணுக்கு இந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்  குறிப்பிடுகையில் தானும்  தனது குடும்ப அங்கத்தவர்கள்  அனைவரும்  சீதாகாந்த் ரோத்ராய் (வயது 28) என்பவரை முழுமையாக நம்பியதாக தெரிவித்துள்ளார்.

மனைவியை தவிர்த்துவிட்டு செக்ஸ் பொம்மைகளுடன் உல்லாசப் பயணம்


கனடாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, ஆளுயர செக்ஸ் பொம்மைகளுடன் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உல்லாசப் பயணம்  மேற்கொண்டு வருகிறார்.

பரபரப்பாக விற்பனையாகும் எதுவும் எழுதப்படாத ‘செக்ஸ் புத்தகம்’


200 பக்கங்களைக் கொண்ட செக்ஸ் புத்தகமொன்று பிரிட்டனில் பரபரப்பாக விற்பனையாகி அதிகம் விற்பனையான புத்தகமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த புத்தகத்தில் எதுவுமே எழுதப்படவில்லை அனைத்து பக்கங்களும் வெறுமையாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய குள்ள மனிதர்-17 வயது ஆனால் உயரம் 22 அங்குலம்

இவர் பெயர் ஜன்ரி பாலாவிங் வயது 17 ஆனால் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளார்.ஜுன் மாதம் 12ம் திகதி இவர் 18 வயதை அடையும் போது இந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கும்.

தற்போதைய பதிவுகளின் படி உலகின் குள்ளமான மனிதரை விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரத்தை அப்போது கொண்டிருப்பார்.தனது முதலாவது பிறந்த நாளைக்குப் பின் இவரின் உடல் உயரம் வளரவே இல்லை என்று கூறப்படுகின்றது.

மு.க.அழகிரியின் மண்டபம் மீது கல் வீச்சு தாக்குதல்: மதுரையில் பரபரப்பு


தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா திருமண மண்டபம் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது.

வியாழன், 19 மே, 2011

கற்பழிக்க முயன்ற தந்தை!!!மகள் கத்தி குத்து

குடிபோதையில் தன்னைக் கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 

சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.

ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு புனித ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்

Add caption
நாம் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிங்களா படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது. இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும். சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது.

புதன், 18 மே, 2011

பருத்தித்துறையில் 17 வயது மாணவி தூக்கில் தொங்கி மர்ம மரணம்!!

யாழ். பருத்தித்துறை உயர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கல்லூரி வீதியைச் சேர்ந்த முருகானந்தராசா நிஷா (வயது 17) என்பவரே இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

கோவிலுக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதைக் கண்டு பொலிஸாருக்கு  அறிவித்ததையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை மந்திகை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு சோனியாவைத் துரத்தி அடியுங்கள்!


''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு காங்கிரஸை அறைவேன். எங்களின் உரு அறுத்த காங்கிரஸைக் கருவறுப்பேன்!'' - திருப்பி அடித்த சீமானின் வெறிகொண்ட வேகம் காங்கிரஸ் தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. 63 தொகுதிகளில், 5 தொகுதிகளில் மட்டுமே தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கரையேறி இருக்கிறது காங்கிரஸ்!!
இது தனிப்பட்ட சீமானுக்கோ, 'நாம் தமிழர்’ கட்சிக்கு மட்டுமோ, கிடைத்த வெற்றி அல்ல. தமிழர் என்கிற இனத்துக்கும், இன மானத்துக்கும் கிடைத்த வெற்றி.

செவ்வாய், 17 மே, 2011

19 வயது பெண் தனது உணவாக சவர்க்காரம் உட்கொள்கிறாள்(படங்கள் இணைப்பு)

19 வயது பெண் தனது உணவாக சவர்க்காரம் உட்கொள்கிறாள் இந்த பெண் தன்னுடையா முன்று நேர உணவாக சவர்காரத்தை உட்கொள்கிறாள் இந்த பெண் சில வேளைகளில் சலவை துளையும் உட்கொள்கிறாள்

தண்ணீரிலும் தரையிலும் ஓட கூடிய கார்(படங்கள் இணைப்பு)

தண்ணீரிலும் தரையிலும் ஓட கூடிய கார் இது மனிதனின் ஓர் அருமையான கண்டுபிடிப்பு இந்த காரின் விலை $200,000 ஆகும் இந்த கார் வெற்றிகரமாக பரிசோதனை பண்ணி முடிக்கப்பட்டுள்ளது கார்

உயிரோடு இருக்க ஒவ்வொரு 15 நிமிடமும் உண்ண வேண்டும்- வினோத பெண்

லிசி வயது 21 எடை 25 Kg மட்டுமே.ஒரு நாளைக்கு 60 தடவை சாப்பிடுகிறார்,இருப்பினும் அவர் எடை கூடவில்லை.
அவர் உடலில் ௦% கொழுப்பு உள்ளது.
மரபியல் மருத்துவர்கள் இவரை ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள் .

பாடம் நடத்தும் ரோபோ

பாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் ம‌ரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது.
எனவே ரோபோ மிஸ் அறிமுகமாகியிருக்கிறார் என்றே குறிப்பிடலாம்.
இந்த டீச்சரின் பெயர் சாயா.சாயாவை படைத்த பிரம்மா டோக்கியோ பல்கலையில் இருக்கிறார். அவரது பெயர் ஹிரோஷி கோபயாஷி.

“நினைத்தாலே போதும்” யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்


அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 
ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர். இம்முறை மூலம் யாருக்கு 
போன் செய்ய வேண்டுமோ அவர்களை மனதில் நினைத்தால் போதும். 
அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்.
இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது:

அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்

வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், “டிவி’  பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது.  சென்னை, மும்பை, டில்லி, பாட்னா, சண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 2,000  பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டு தனத்துடனும், அதிக உடல் பருமனுடனும் இருப்பர்.  அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், இந்த விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக “டிவி’ பார்ப்பது தான் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதுகாப்பானது.  பெரும்பாலான பெற்றோர், தங்களது குழந்தைகள், “டிவி’யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து,  சத்துக் குறைவான  உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
“டிவி’ நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும், நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். 12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள், தங்களது பெற்றோருடன் அமர்ந்து, “டிவி’ பார்ப்பதையே விரும்புகின்றனர். “ரியாலிட்டி ÷ஷா’க்களை 76 சதவீத பேர் விரும்புகின்றனர்.  பெரும்பாலான, “டிவி’ நிகழ்ச்சிகளில் வன்முறை, ஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, “டிவி’ நிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அமெரிக்காவில் ஒபாமா, ஹிலாரி கலந்து கொள்ளலாம்! மகிந்த கலக்கம்..!



இலங்கை இனவாத சிங்கள அரசினால் சிறுபான்மைத் தமிழர்கள் அவர்தம் விடுதலைக்காக போராடிய மக்கள் எண்பதாயிரம் பேர் வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி தமிழினத்தை அழித்தது ஹிட்லர் மகிந்த ராஜபக்ச அரசு.

இதே காலப் பகுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற தலைமை செயலர் பதவி தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக ஒபாமா தமிழர் அமைப்பு என ஒன்று உருவாக்கம் பெற்று பெரும் பங்காற்றியது .



இதன் அடிப்படையில் இம்முறை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்கநாளில் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், சட்டாமா அதிபர்கள், ரொபேர்ட் பிளேக் போன்றவர்கள் கலந்து கொண்டு அந்த மக்களின் துயரில் பங்கேற்று கொள்வதுடன் ஐ.நாவினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .



இந்த நிகழ்வில் முக்கிய சிறப்பாளராக முன்னாள் ஐ.நாவுக்கான பேச்சாளர் கலந்து கொள்ள உள்ளதும் அவர் அங்கு மேலும் பல தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது .



இந்த ஒருங்கிணைப்பு பணிகளை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் நேரடியாக செய்து வருவதாக சிங்கள உளவு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டு பரப்பரை ஏற்படுத்தியுள்ளது .



நாடு கடந்த தமிழீழ அரசினை முடக்கி அதன் கட்டமைப்பை சீர்குலைக்க இலங்கை அரசு பலத்த முயற்சி எடுத்து வருவதும் அதன் பின் புலத்தில் தமிழர்களை வைத்து அதற்கான மோதல்களை உருவாக்கி சீர்குலைவு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதை அண்மைக்காலச் சம்பவங்கள் பல கோடிட்டு காட்டுகின்றன.



இந்த முக்கியமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால் நாடு கடந்த அரசு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாக திகழும் என்பதும் உலகளாவிய ரீதியில் இவை தமிழர்களின் விடுதலைப் போருக்கு கிடைத்த முதல் வெற்றியுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்கி சானை விற்க நினைத்த பெற்றோர்!

உலகப் புகழ்பெற்ற கராத்தே வீரரான புரூஸ் லீக்கு இணையாகப் பேசப்படுபவர் `ஜாக்கி சான்’. நடிகர், நகைச்சுவைக் கலைஞர், தற்காப்புக் கலைஞர், சண்டைக் கலைஞர், சண்டைக் காட்சி அமைப்பாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், தொழிலதிபர் என்று ஜொலிப்பவர் இவர். ஜாக்கி சான், 7.4.1954 அன்று ஆங்காங்கில் பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். குழந்தையை வளர்க்கக் கூட வசதியில்லாத ஜாக்கியின் பெற்றோர், நீண்ட யோசனைக்குப் பின் குழந்தையை விற்பதற்கு முடிவெடுத்தனர். குழந்தையை வாங்குவதற்கு ஓர் ஆங்கில டாக்டரும் முன்வந்தார். ஆனால் ஜாக்கி சானின் தந்தையிடம் அவரது நண்பர் ஒருவர், `உங்கள் இருவருக்குமே தற்போது 40 வயதாகிறது. எனவே உங்களுக்கு இதுவே கடைசிக் குழந்தையாக இருக்கலாம். எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தையை விற்க வேண்டாம்’ என்று அறிவுரை கூறினார். அதன்பின், குழந்தையை விற்கும் முடிவிலிருந்து ஜாக்கியின் தந்தை மாறிவிட்டார். ஒருவேளை ஜாக்கி சானை விற்றிருந்தால்…? அவர் நன்கு கல்வி கற்ற மனிதராக, ஆனால் யாருக்கும் தெரியாதவராக எங்கோ ஒரு மூலையில் முடங்கியிருப்பார். ஆனால் அதிகம் படிக்காத ஜாக்கி சான்தான் உலகப் புகழ் பெற்ற நடிகராகவும், மனிதநேயமிக்க மனிதராகவும் திகழ்கிறார்.

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் கடிதம்!

சட்ட மன்ற தேர்தலில் தோல்வி, ஆட்சியில் தோல்வி, வளர்ச்சியில் தோல்வி, வாழ்கையில் தோல்வி என எங்கும் தோல்வி எதிலும் தோல்வி என துரத்தப்படும் உடன்பிறப்பே! இது தோல்வியல்ல, கடும் பணிசுமைகளுக்கு கிடைத்த தற்காலிக ஓய்வு.

மக்களுக்கு அயராது உழைத்துவிட்டோம் என்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டனர்.சிறிது இளைப்பாறி மீண்டும் மக்கள் பணியை  தொடர்வோம்.ஒய்ந்து விட்ட நாம் வீழ்ந்துவிடவில்லை.ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது.வீழ்ந்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தவர்களை வெற்றி பவனியில் அரவணைக்கும் காலம் வரும்.

விடையில்லா கேள்விகளுக்கும் பதில் "மூன்று" எழுத்து, பதிலை பகுக்கும் "அறிவு" மூன்று எழுத்து, அறிவுக்கு உரமிடும் "ஆசான்" மூன்று எழுத்து,அனைத்திற்கும் வித்திட்ட "அன்னை" மூன்று எழுத்து, அவள் ஊட்டிய ”தமிழ்” மூன்று எழுத்து, தமிழோடு மக்களுக்கு செய்யும் ”தொண்டு” மூன்று எழுத்து,அதனை சார்ந்து செய்யும் கழகத்தின் பெயர் மூன்று எழுத்து.இதை கண்டு எடுத்த ”அண்ணா” மூன்று எழுத்து.இவைகள் இணையும் சக்தியிலே ௬டும் வெற்றியும் மூன்று எழுத்து, அந்தகனியை கனியை நாம் மட்டும் சுவைத்தால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழி பொய்த்து விடும்.மாற்று கட்சியினரும் வெற்றிக்கனியை சுவைக்க நாம் தோல்விக்கு தோள் கொடுத்துள்ளோம்.
    
தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டோம். கழக வரலாற்றிலே, காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப்போவதில்லை, ஒப்பாரி வைத்து, ஓலமிடும் அளவுக்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல. முயன்றோம்-நின்றோம்-தோற்றோம்!முயல்வோம்-நிற்போம் -வெல்வோம்!கழகம் அழிந்துவிட்டது, கழகத்தை அழித்துவிட்டோம் என்று ஆனந்தக் ௬ச்சலிடும் அன்பர்கள் வரலாற்றை புரட்டிப்பார்க்க நினைவுபடுத்துகிறேன். தடம் புரண்ட வரலாறுகளை உலுக்கி,குலுக்கி திருத்தி இருக்கிறோம், இன்று தடம் புரண்டதையும் திருப்பி எடுத்து, திருத்தி எழுதுவோம்.

விட்டில் பூச்சிகளின் வெளிச்சத்திலே சூரியன் அழிந்து விட்டது என்பது சொல்வது,கண்ணை மூடிக்கொண்டு கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம். இந்த தோல்வி வெற்றிக்கான அழிவில்லா விதைகளை விதைத்துள்ளது.விதைக்கப்பட்ட விதைகள் உயிர் பெற்று மரமாகி விண்ணை முட்டும் அளவு வளரும் தூரம், கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரத்தைப் போல நெடியதல்ல, இரவுக்கும், பகலுக்கும் இருக்கும் நேர இடைவெளியைப் போல மிகவும் குறுகியது.

கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும்.பொறுத்திரு உடன்பிறப்பே! காதுகளை ௬ர்மையாக்கி, புத்தியை தீட்டி வைத்து கொண்டு மக்கள் பணி செய்ய காத்திரு! அண்டத்தின் சுழற்சியிலே ராத்தூங்கும் நம்மோடு சூரியன் தூங்குவதில்லை.  இன்னுமொரு உதயத்திற்கு காத்திரு, புது உலகம் நமக்காக காத்து இருக்கிறது சரித்திரமும், சாதனையும் படைக்க!

சாய் பாபா ஏன் சாமியானார்?

சத்யநாராயண ராஜு என்னும் சத்ய சாய் பாபா ஏன் சாமியார் ஆனார் என்றுத் தெரியுமா? அவர் சாமியானதுக்கு காரணமே இந்த கேடுக் கெட்ட இந்திய சமூகம் தான். ஆனால் கெட்டதில் ஒரு நல்லதாக கோடிக் கணக்கான சொத்து, புகழ், படுக்கைத் துணை பதவியோடு இராஜ யோகமாய் வாழ்ந்து மறைந்துவிட்டார் எனலாம்.

பின்லேடன் உடலை எடுத்துச் சென்ற போர்க்கப்பலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி.


அல்-காய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் உடலை கடலில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற கார்ல் வின்சன் என்ற போர்க்கப்பலை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்று அவரது உடலை ஹெலிகாப்டரில் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து பின்லேடன் உடல் கார்ல் வின்சன் போர்க் கப்பல் மூலமே கடலுக்குள் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இந்த போர்க்கப்பலை பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதை புரிந்து கொண்ட அமெரிக்கா கப்பலைப் பார்க்க அனுமதி அளித்துள்ளது. கார்ல் வின்சன் கப்பல் இப்போது பிலிப்பின்ஸின் மணிலா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டு அதிபர் 3-வது பெனிங்கோ அகியூனோ, அவரது அமைச்சரவை சகாக்கள், முக்கிய ராணுவ அதிகாரிகள் ஆகியோர் கார்ல் வின்சன் கப்பலை சனிக்கிழமை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து சில பத்திரிகையாளர்களும் சென்று பார்வையிட்டனர். கப்பலைப் பார்வையிட வருபவர்கள் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து கப்பலுக்குள் விரிவாக ஏதும் விவாதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்கள் கார்ல் வின்சன் கப்பலை அமைதியாகப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
பின்லேடனின் உடலை எடுத்துச் சென்ற கப்பல் என்பதால் அதன் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி கோபத்தை தீர்த்துக்கொள்ள முயலலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அக்கப்பலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம்; ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை


கொண்டார். உடனடியாக அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
 
தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின்னர் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கேற்ப திறமையான அதிகாரிகளை போலீஸ் துறையில் நியமிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட திரிபாதி உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
 
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி விழிக்கலாம். குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை செயின் பறிப்பு, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கடந்த ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தன. ரவுடிகளின் அட்டகாசமும் அதிகமாக இருந்தது. கடைகளில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவங்களும் நடைபெற்று வந்தன.
 
இதனை கட்டுப்படுத்த புதிய கமிஷனர் திரிபாதி போலீசாருக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் போலீசார் துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் பின்னணியில் இதுநாள்வரை ஆட்டம் போட்ட ரவுடிகளின் குற்றச் செயல்களை தூசுதட்டி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  
 
சென்னை மக்களை வாட்டி எடுக்கும் பிரச்சினைகளில் இன்று அதிகமாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதற்கு புதிய கமிஷனர் திரிபாதி முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. போலீஸ் கமிஷனரை தொடர்ந்து சென்னையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
 
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை இணை கமிஷனர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எந்த நேரத்திலும் இடமாறுதல் உத்தரவு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இவர்கள் தவிர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உளவு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் உள்ளனர். 70-க்கும் மேற் பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது

குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பமளியுங்கள்: ஐ.நா.விடம் புலிகள் வேண்டுகோள்!

தங்கள் இயக்கம்  மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பமளியுங்கள் என்று  ஐ.நா.விடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தாம் வரவேற்பதாகவும், அதே நேரம்  தம் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த ஐ.நா சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பிரஸ்தாப அறிக்கையின் முழு வடிவம் கீழ்வருமாறு:

தலைமைச் செயலகம், 

தமிழீழ விடுதலைப்  புலிகள்,

தமிழீழம்.

16.05. 2011.        

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2011

அன்பான தமிழ் மக்களே,

மே-18. தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.

காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.

பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள். இருக்க இடமின்றிஇ உண்ண உணவின்றிஇ மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள்இ எறிகணைத்தாக்குதல்கள்இ  பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள்இ போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள்இ இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.

பன்னாட்டுத் தொண்டு  நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.

எனினும் மக்களோடு மக்களாக வாழ்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள்இ மனிதநேயப் பணியாளர்கள் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை உலகத்திற்குத்  தெரியப்படுத்திக் கொண்டிருந்தபோதும் உலகம் அதனைப் பக்கச்சார்பானது எனப் புறந்தள்ளியது. இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறுகிய காலத்தில் சிங்கள ஆயுதப்படைகளினால் வேட்டையாடப்பட்டனர்.

போர் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது எமது மக்களும் எமது அமைப்பும் உலகை நோக்கி எழுப்பிய குரல்களை அந்நேரத்தில் செவிமடுக்காது பாராமுகமாக இருந்த உலகு இன்று விழித்தெழுந்துள்ளது. அன்று எமது குரல்களை நம்பாமல்இ பக்கச்சார்பானவையென்றும்இ உறுதிப்படுத்த முடியாத தகவல்களென்றும் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலம் ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த உறவுகளும்இ மிகப்பெரும் கொலை வலையத்திற்குள் இருந்த பொதுமக்களும் தமக்கு நேர்ந்த இன்னல்களைப் பல்வேறு வழிகளிலும் முறையிடத் தொடங்கினர். அத்துடன் உலகளாவிய தமிழர்கள் தம் உறவுகளுக்கு  நியாயம் வேண்டிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே ஐக்கிய நாடுகள் சபை  போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர்குழுவை அமைத்து  அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர் குழு அறிக்கையினைத் தமிழ் மக்களும் நாமும் வரவேற்கின்றோம். இவ்வறிக்கையில் எம் மக்களிற்கு சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் எமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது அமைப்பு தனது தரப்பு நியாயங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழலை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.

எம் அன்பிற்குரிய தமிழக மக்களே ,

எமது விடுதலைப் போராட்டத்திற்கும், போராட்டத்தில் உறுதியாக இருக்கும் எம் மக்களுக்கும் எம் தொப்புள் கொடி உறவை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத 2009 ஆம் ஆண்டு மே மாதம்  தமிழர் இனவழிப்பிற்குத் துணைபோனவர்களைப் புறந்தள்ளும் வாய்ப்பினைக் காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவே காலச்சக்கரத்தின் நியதியாகும்.

எம்மக்களின் சாவோலங்களின் ஒலிகள் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன என்பதனையும், முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட  எம்மக்களின் ஆத்மாக்கள் உங்களை இரத்த உறவாக இணைத்துக் கொண்டுள்ளன என்பதனையும் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் உலகத்திற்கு உரத்துக்கூறி இருக்கின்றீர்கள். விடுதலை வேள்வியில் அயராது போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்கும்வரை எமது தமிழக உறவுகள் தொடர்ந்தும் பக்கபலமாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பான உலகத்தமிழ்  உறவுகளே,தமிழீழத் தாயகமண்ணில் வாழ்கின்ற எமது மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளுக்குப்பின் எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசபடைகளின் திறந்தவெளிச் சிறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்றநிலையில் உலகத்திற்கு அவர்களின் உண்மைநிலையினை வெளிப்படுத்தமுடியாத அடக்குமுறைக்குள் தொடர்ந்தும் இனவழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில் இனவெறியரசு சொல்வதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில்இ இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோஇ அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். அதுவரையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 நன்றி.

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆ.அன்பரசன்,ஊடகப்பிரிவு,தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

என்பதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலியில் கறுப்பு நிறமாக மாறிய கடல் நீர்! காரணம் ஜப்பான் அணுக் கழிவுகளா?

காலியின் களுவெல்ல பிரதேசத்தில் கடல் நீர் கறுப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடல் நீரின் நிறமாற்றத்திற்கு காரணம், ஜப்பான் அணுக்கழிவுகள் கடலில் கொட்டப்பட்டதன் தாக்கமாக இருக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 

கறுப்பு நிறமான கடல் நீருடன் எண்ணெய்த் தன்மையான ஒரு வகைப் படிவும் நீரில் அடித்து வரப்பட்டு கரையொதுங்கும் காரணத்தால் களுவெல்ல பிரதேசக் கடற்கரையோரம் மாசடைந்து காணப்படுகின்றது. 

சமுத்திரவியல் மாசுகட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், கடல் நீரின் கறுமைக்கும் அதனோடு சோ்ந்து கரையொதுங்கும் கழிவுகளுக்கும் எண்ணெய் அல்லது ஏதாவது இரசாயனம் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். 

காலி, களுவெல்லை பிரதேசத்தின் கடற்பரப்பில் சுமார் ஒரு ஏக்கர் வரையான பரப்பளவில் நீரானது கறுப்பு நிறமாக மாற்றமடைந்து மாசடைந்து காணப்படுகிறது.

திங்கள், 16 மே, 2011

ஜெயலலிதாவை சோனியா விருந்துக்கு அழைத்ததன் எதிரொலி- திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிறது?


முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்ததால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள திமுக, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 
காங்கிரஸ் கட்சியின் பச்சோந்தித்தனம் உலகம் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியையு்ம், திமுக பெரும் தோல்வியையும் சந்தித்ததைத் தொடர்ந்து அப்ப்டியே அந்தர்பல்டி அடித்தது காங்கிரஸ்.
திமுகவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை வசதியாக மறந்து விட்ட அந்தக் கட்சி, அவசரம் அவசரமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது. மேலும் சோனியா காந்தியோ, ஜெயலலிதாவுடன் 2 முறை போனில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்துக்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார்.
இதுகுறித்து ஜெயந்தி நடராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இன்னும் திமுக எங்களது கூட்டணிக் கட்சிதான். ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்ததும், வாழ்த்து கூறியதும் ஜனநாயக நடைமுறைதான் என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த செயலால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் இனிமேல் டெல்லிக்கு சென்று என்ன பயன் என்று கூறி வருவதாக தெரிகிறது.
இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறி வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை எடுப்பது குறித்து திமுக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், கூட்டணியை விட்டு வெளியேறாது திமுக என்று தெரிகிறது. குறிப்பாக கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை காங்கிரஸுடனான கூட்டணியை திமுக தானாக முறிக்காது என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவால் சோர்ந்து போய் வீட்டோடு முடங்கியுள்ள கருணாநிதியை, திமுக முன்னணித் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக சந்தித்துப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் போக்கு குறித்து அவர்கள் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
வேண்டும் என்றே திமுகவை சீண்டுவது போல காங்கிரஸ் நடப்பதாக மூத்த தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.
இருப்பினும் தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதி வீடு வரை வந்து விட்ட நிலையில் அவசரப்பட்டு முடிவெடுக்க திமுக தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அமைச்சரவையிலிருந்து மட்டும் விலகிக் கொண்டு, வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவிக்கலாமா என்பது குறித்து திமுக தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.
தற்போது மத்திய அமைச்சரவையில் அழகிரி உள்பட 6 அமைச்சர்கள் திமுகவுக்கு உள்ளனர்.

மேலும் 2014 ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை வாழ்த்துவது என்பது வேறு, சோனியா காந்தி வாழ்த்து கூறுவது என்பது வேறு. சோனியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. மேலும் திமுகவின் பரம விரோதி அதிமுக என்பது சோனியா காந்திக்குத் தெரியாததல்ல. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக தலைவரை அவர் வாழ்த்துவது என்பது சீரியஸான ஒரு விஷயம்.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்டதாகவே தலைவர் கருதுகிறார். அவரது கருத்தே எங்களது கருத்தும். 2014 லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்க காங்கிரஸும், அதிமுகவும் முடிவு செய்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம் என்றனர்.

வேற்றுக்கிரக வாசிகள் உண்மையா பொய்யா..? சூடுபிடிக்கும் விவாதங்கள்!

வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல் அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது. இதனை நம்புவோரின் எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. கலிபோர்னியா நகரில் மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷ தன்மை கொண்ட ஆர்சனிக் என்ற நச்சு பொருள் கலந்துள்ளது. இதில் உயிர்கள் வாழ்வது என்பது அரிதான ஒன்று என கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள், ஏரியின் கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர்.
இது ஆர்சனிக் என்ற நச்சு பொருளை எடுத்து கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். மேலும் விஞ்ஞானிகள், பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில் அமைந்திருக்கும் பூமி போன்ற வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர். கடந்த 10 வருடங்களில், சூரிய குடும்பத்தை தவிர்த்து 500 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம், வானியலாளர்கள் பூமி போன்று 3 மடங்கு பெரிதான கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
இந்த கிரகத்தில் நம்முடைய பூமியில் இருப்பது போல் வளிமண்டலம், புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பில் நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளது. இதற்கு கிளீஸ் ஜி என பெயரிட்டுள்ளனர். இது ஏறத்தாழ 118 ,000, 000,000,000 மைல்கள் அளவிற்கு தூரமும், மேலும் இதிலிருந்து வெளிப்படும் ஒளியானது பூமியை வந்தடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் கணக்கிட்டுள்ளனர். இதனையடுத்து வேற்று கிரகத்தில் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மேலும் வலுவடைந்துள்ளது. அது தொடர்பான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.
இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் இந்த 6 ரசாயனங்களால் உருவானவை இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ.வில் பாஸ்பரஸ் இல்லை என்பது தான் அந்த பகீர் தகவல். அதன் டி.என்.ஏ.வி்ல் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது .ஆர்சனிக்-பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் ‘உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது.

கால்களால் பஞ்சர் போடும் சீனமனிதன்..!- படங்கள் இணைப்பு!


இரு கைகளையும் வைத்துக்கொண்டே நாம் வேலைக்கு சென்று சம்பாதிக்க எவ்வளவு பாடுபடவேண்டியிருக்கிறது. ஆனால் சீனாவில் ஒரு நபர் ஒரு கை முழுமையாக இல்லாமலும் ஒரு கை ஊனமாக இருக்கின்ற போதிலும் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்கின்ற வைராக்கியத்தோடு கால்களால் உழைப்பு நடாத்தி வருகிறார். அதுவும் ஒரு கடினமான தொழில். சைக்களில் ரயர்களுக்கு பஞ்சர் போடும் தொழிலையே இவர் செய்கிறார். கைகளால் பஞ்சர் போடுவது என்பதே சற்று கடினமான விடயம்தான் இவரோ தனது இரு கால்களாலும் தன்னிடம் வரும் வாடிக்கையார்களின் சைக்கிள்களுக்கு பஞ்சர் போட்டு கொடுக்கிறார். இவரின் திறமையை என்னவென்று சொல்லி மெச்சுவது?






தலையணையை திருமணம் செய்த வினோத மனிதன்!(படஇணைப்பு)

உண்மையாக காதலிப்பவர்கள் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறது இந்தச்சம்பவம். புதியஉலகம் தரும் வித்தியாசமாக செய்திகளுள் இதுவும் ஒன்று. ஒரு மனிதன் விலங்குகளை திருமணம் செய்யும் வித்தியாசமாக முயற்சிகளில் தொடங்கி ரோபோ வை திருமணம் செய்வது வரைக்கும் வந்து நின்ற மனிதனின் காதல் உணர்வு இப்போது இன்னும் வித்தியாசமான முறைக்கு மாறியுள்ளது. உயிரே இல்லாத ஒரு தலையணையை ஒருவர் திருமணம் செய்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். கொரியாவைச்சேர்ந்த ஒரு இளைஞன் தனது தலையணை மீதான அதீதகாதலால் அதையே திருமணம் செய்துள்ளார்

ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்

தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா சற்றுமுன், சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் பதவி ஏற்றுக்கொண்டு சத்தியபிரமாணம் செய்து கொண்டார். அமைதியான , நிம்மதியான வாழ்வைத் தமிழக மக்களுக்கு இனி தான் தரப் போவதாக இனிப்புச் செய்தியையும் அவர் தெளிவாக தெரிவித்தார். 

பதவிப் பிரமாணத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா செய்து வைக்கிறார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன், புதிய அரசை இன்று அமைக்கிறது. 

அ.தி.மு.க. சட்டசபை தலைவராக, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா ஏகமனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதாவை புதிய அமைச்சரவை அமைக்குமாறு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா அழைப்பு விடுத்தார். முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பதை, தலைமைச் செயலர் மாலதி நேற்று ராஜ்பவனில் அதிகாரப்பூர்வமாக நிருபர்களிடம் வெளியிட்டார். சென்னை பல்கலை நூற்றாண்டு அரங்கில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா, இன்று பகல், 12.15 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது. 

தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். அவருடன், அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர். பதவிப் பிரமாணத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா செய்து வைக்கிறார். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விஜயகாந்த், நல்லக்கண்ணு, தா.பாண்டியன், ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, கிருஷ்ணசாமி, சரத்குமார், சேதுராமன் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர் 

அதேபோல், குஜராத் முதல்வர் மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர், பரதன், தேசிய செயலர், டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர், பிரகாஷ் கராத் மற்றும் தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். 

முதல்வர் மற்றும் அமைச்சர்களது பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா, அங்கு கோப்புகளில் கையெழுத்திடுகிறார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் விவரம், கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்படும். கடந்த கால இருள் பாதையில் இருந்து விலகி, தமிழக மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கு புதிய அரசு செயல்படும் என்ற மகிழ்ச்சிச் செய்திகள் இனி வெளிவரும் என்ற கருத்து உருவாகியுள்ளது. 

அழைப்பு : முன்னதாக, புதிய அரசு அமைக்க, கவர்னர் விடுத்த அழைப்பை அடுத்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, 11.45 மணிக்கு, கிண்டியில் உள்ள ராஜ்பவனிற்கு சென்றார். அங்கு, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்து, ஜெயலலிதா கடிதம் அளித்தார். இருவரின் சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது.

போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி

பாலஸ்தீன எல்லைப் பகுதியில் சில குழுவினர் போராட்டத்தில் ஈடுட்டனர். இந்த போராட்ட நபர்கள் மீது இஸ்ரேலிய துருப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
துப்பாக்கி தாக்குதலில் 12 பேர் இறந்தனர். ஏராளமானர்கள் காயம் அடைந்தார்கள். பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சிரியா வழியாக கோல்டன் ஹை பகுதியில் நுழைய முயன்றனர் என இஸ்ரேல் கூறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யகு கூறுகையில்,"நமது எல்லைப் பகுதியையும் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டிய உறுதியில் உள்ளோம். அமைதி விரைவில் திரும்பும்" என்றார்.
கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பின்னர் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் எல்லைப் பகுதியில் போராடுகிறார்கள்.
இந்த நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்பாக நடந்த எதிர்ப்பு போராட்டக் கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு இருப்பதால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோல்டன் ஹை பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய துருப்பினர் மீது பாலஸ்தீன போராட்டக்காரர்கள் கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். மஜ்தால் ஷாம்ஸ் என்ற கிராமத்தின் அருகே போராட்டக்காரர்கள் வேலியை கடந்து செல்ல முயன்றனர்.
கடந்த 1967ம் ஆண்டு நடந்த 6 நாள் போரின் போது சிரியாவின் எல்லைப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரேலின் அத்து மீறலை கண்டித்து தற்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மாவிட்டபுரம் பகுதியில் மீளக்குடியேறிய மக்களின் நிலை கண்டு மனம் வெதும்பிய ஈராக் தூதுவர்


வலி.வடக்கு, மாவிட்டபுரம் பகுதிக்கு விஜயம் செய்த ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ் அங்குள்ள மக்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். தன்னிடம் கைவசம் இருந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அந்தக் குடும்பங்களுக்குத் தூதுவர் பகிர்ந்தளித்தார்.
வலி. வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வலித்தூண்டல், கொல்லங்கலட்டி, மாவிட்டபுரம் மற்றும் வித்தகபுரம், இளவாலை வடமேற்கு ஆகிய பகுதிகளுக்கு  ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ், கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில் வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ்.முரளிதரனுடன் சென்றிருந்தார்.
அங்கு சென்ற தூதுவர் அங்குள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு அளவளாவி "உங்களுக்கு அரச உதவி கிடைக்கிறதா?, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் எந்த மட்டில் கிடைக்கின்றன'' என்று பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் நிலைமைகளை அறிந்துகொண்டார். 
அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பரிதாப நிலைகளை நோில் கண்டும், கேட்டும் அறிந்துகொண்ட ஈராக் தூதுவர், தான் மீண்டும் அப்பகுதிகளுக்கு வருவேன் என்றும் அவ்வாறு வரும்போது பல்வேறு உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளுடனேயே உங்களைச் சந்திப்பேன் என்றும் உறுதியளித்துச் சென்றார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் வாழ்த்தும் பாராட்டும்


இன்று தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள செல்வி  ஜெயலலிதா அவர்களே!  உங்கள் வெற்றிக்கு எமது மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டுககளும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அரச தலைவர்கள் எம்மை மறந்த்தாலும் எம் உறவுகளே! நீங்கள் எம்மை மறக்கவில்லை என்ற செய்தி கேட்டு மட்டில்லா மகிழ்ச்சியடைந்தோம். தொப்புள்கொடி உறவுக்கு ஓர் அர்த்தத்தைத் தந்து எம்மை நெஞ்சுருக வைத்துவிட்டீகளே!.
வெற்றியின் முடிவுக்கு முன்பே நீதி கேட்டு போர்குற்றம் புரிந்த இராசபக்சாவை கூண்டிலேற்றி விசாரணை செய்யவேண்டும் என முடிசூடவிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமனின் சூளுரை கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தோம்.
மக்கள் திலகம், எம்.ஜி. இராமச்சந்திரன் போல் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஈழத் தமிழர் மீது காட்டும் அன்பும் அக்கறையும் நிலைகொள்ள வேண்டும். இது கண்டு சிங்கள் அரசு சிலையாக வேண்டும். இந்திய அரசும் ஈழத் தமிழர் விடயத்தில் இந்திரா காந்தி அம்மையார் போல் உள்ளுணர்வோடு செயற்பட வேண்டும். இதுதானே ஈழதமிழரின் ஆசை, உலகத் தமிழரின் விருப்பம்.
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே!
உங்கள் வெற்றிக்கு எமது மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டுககளும்.
உங்கள் ஆட்சியில் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கவேண்டும், ஐக்கிய நாடு நிபுணர்கள் அறிக்கைக்கு இந்தியா ஆதரவு நல்கவேண்டும், ஈழத் தமிழர் இழந்த உரிமையை மீண்டும் பெற எம்மோடு சேர்ந்து நீங்கள் செயற்படவேண்டும். இதுவே நாம் வேண்டுவதும் விரும்புவதும்.
தங்கள் அன்புள்ள
கலாநிதி ராம் சிவலிஙகம்
பிரதிப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு

ஞாயிறு, 15 மே, 2011

புதிய தமிழக அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியீடு


தற்பொழுது நடந்து முடிந்த தமிழக சட்டபேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்று நாளை பொறுப்பேற்கவுள்ளது.
இந்நிலையில் நாளை பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1. ஜெ. ஜெயலலிதா - முதல்வர்.
2. ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்.
3. கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்.
4. நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்.
5. கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்.
6. சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்.
7. ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்.
8. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்.
9. சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
10. பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்.
11. சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்.
12. செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர்.
13. கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்.
14. எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
15. எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்.
16. கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்.
17. எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்.
18. டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.
19. எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்.
20. பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்.
21. ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்.
22. எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்.
23. செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்.
24. பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்.
25. ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.
26. என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.
27. வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்.
28. என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்.
29. கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்.
30. இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்.
31. புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்.
32. எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
33. வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்.
34. என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்.

மது அருந்துவதை விட மோசமானது கணணி உபயோகிப்பது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வயர் இணைப்பு இல்லாத இணைய வசதிகளுடன் கூடிய கணணிகள் ஆகியவை மனித உடல்நலத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியவை.
இதனால் பள்ளிகளில் அவற்றை பயன்படுத்த உடனடியாக தடை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய கூட்டமைப்பு கழகங்கள் நடத்திய ஆய்வில் இவைகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து விளையும் என தெரியவந்துள்ளது. இத்தகவலை டெய்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை விட கைத்தொலைபேசிகள் மற்றும் கணணிகளால் பெரும் ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிகளில் இவற்றின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும் திட்டமிட்டுள்ளன. இருப்பினும் இதற்கு பல எம்.பி.க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.