கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 17 மே, 2011

சாய் பாபா ஏன் சாமியானார்?

சத்யநாராயண ராஜு என்னும் சத்ய சாய் பாபா ஏன் சாமியார் ஆனார் என்றுத் தெரியுமா? அவர் சாமியானதுக்கு காரணமே இந்த கேடுக் கெட்ட இந்திய சமூகம் தான். ஆனால் கெட்டதில் ஒரு நல்லதாக கோடிக் கணக்கான சொத்து, புகழ், படுக்கைத் துணை பதவியோடு இராஜ யோகமாய் வாழ்ந்து மறைந்துவிட்டார் எனலாம்.


சத்யநாராயண ராஜு பெட்டவெங்கம்ம ராஜு ரட்னாகரம், ஈஸ்வரம்மா தம்பதிகளுக்கு மகனாய் புட்டப்பர்த்தியில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு முற்போக்கான மனிதர் கடுமையான உழைப்பாளி ஆவார். ஆனால் சத்ய சாய் பாபாவை கெடுத்தது அவரின் தாயார் தான். சிறு வயது முதலே செல்லப் பிள்ளையாக வளர்த்த அவரின் அன்னையார் அடிக்கடி சீரடி சாய் பாபாவின் மகிமைகளை சொல்ல் வளர்த்தார். தாயின் பிள்ளையாக வளர்ந்த சத்யநாராயணாவுக்கு படிப்பு சுத்தமாக பிடிபடவில்லை. புட்டப்பர்த்தியில் இருக்கும் ப்ராமணர்கள் வீடுகளுக்கு சென்று வருவதும், அன்னையாரோடு கோயில்களுக்கு சென்று வருவதும், வீட்டிலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதுமாகவே வாழ்ந்தார்.

கூத்து நடக்கும் போது எல்லாம் கூத்துக்களைக் காண சென்றுவிடுவதும் பின்னர் அவற்றில் வரும் கதாபாத்திரங்களாக மாறி அதே போல தாயாருக்கு நடித்துக் காட்டுவதும் இவரின் இயல்பாக இருந்தது. ஒருவித கற்பனா உலகில் வாழ்ந்த சத்ய நாராயண ஒருக் கட்டத்தில் தாமே உயர்ந்தவன் என்றும் தமக்கு சக்திகள் இருப்பதாகவும் நம்பினார். ஆனால் அவை உண்மையில் இல்லை என்பதையும் உணர்ந்தார், ஆனால் இருக்க வேண்டும் என்ற ஆழ்மன உணர்வில் மூழ்கிப் போனார். தானே சீரடி சாய் பாபாவின் மறு அவதாரம் என்றும் நினைத்துக் கொண்டார்.

பருவ வயதை எட்டிய சத்ய சாய் வழக்கமான ஆண் பிள்ளைகள் போலே தாம் இல்லை என்பதை உணர்ந்தார். பெரும்பாலும் தாயாரோடு நெருங்கி பெண்களோடு வளர்ந்த சத்ய நாராயணாவுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மை இருந்தது. அதீதமான மன அழுத்தமும், சக தோழர்களின் புறக்கணிப்பும், சரியான கல்வி வராததால் ஏற்பட்ட தந்தையும் கண்டிப்பும், தாம் அழகில்லை என்ற உணர்வும் ஒருவித மன அழுத்தத்தினை ஏற்படுத்தியது.

பருவ வயதில் சத்ய நாராயாணாவுக்கு ஆண்கள் மீதான ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் அவரின் மன அழுத்தம் அதிகரித்தது. தாம் மற்றவர்கள் போல கல்வியிலும், அழகிலும், பழக்க வழக்கத்திலும் திறமையானவர் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையோடு தமது ஓரினச் சேர்க்கை உணர்வும் அவரை கடும் மன உளச்சலுக்கு ஆற்றியது. அத்தோடு இல்லாமல் தாமே கடவுள், தாமே சீரடி பாபாவின் அவதாரம் ஆகிய எண்ணமும் வலுத்தது. அதனால் Body dysmorphic disorder என்ற நோயால் தாக்குறப்பட்டுள்ளார்.

சத்யநாராயணா ஒரு போதும் பெண்கள் மீது மோகித்தது இல்லை. அதனால் தான் இதுவரை பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு அவர் மீது விழுந்ததே இல்லை. அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் ஆனால் பருவ வயதில் தாம் மற்றவர் போலே இல்லை, படிப்பும் இல்லை, அழகும் இல்லை என்ற எண்ணத்தில் சமூகம் தன் மீது கொடுக்கப் போகும் அழுத்ததினை எப்படி எதிர்க் கொள்வது என்ற சிந்தையில் தம்மை தேள் கொட்டியதாக கூறினார்பித்துப் பிடித்தவர் போல நடந்துக் கொண்டார். தாழ்வு மனப்பானமையும், தம்மை கடவுளாக ஆக்கிக் கொள்ள வேண்டிய மனப்பான்மையும், ஓரினச் சேர்க்கை உணர்வும் அவரைப் போட்டுக் குழப்பியது. தமக்குத் தெரிந்த கற்றுக் கொண்ட சமஸ்கிருதத்தில் உளறித் தள்ளினார். சத்யநாராயணாவின் நிலையை உணர்ந்த தந்தை அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். ஆனால் வசதிகள் அற்ற அக்காலத்தில் அவரை சாமியாடியிடம் கொண்டு போய் வேப்பிலை அடிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கொஞ்ச நாளில் அவருக்குள் உண்டான ஸ்பிரிட் பெர்சானலிட்டியால் தானே சாய் பாபா என்று அறிவித்துக் கொண்டார். தானே கற்ற அரைக் குறை வேதாந்தங்களை மக்களுக்கு சொல்லி வந்தார். இதனால் அனைவரும் தன்னை மதிப்பார்கள் என்ற பெருமித உணர்வு அவருக்குப் பிறந்தது. அவரின் ஓரினச் சேர்க்கை உணர்வை உணர்ந்த அவரின் தந்தை அவரைக் கடுமையாக் கண்டித்திருக்க வேண்டும், இதனால் வீட்டினை விட்டு வெளியேறிய அவர், போன இடத்தில் எல்லாம் தம்மை கடவுளைப் போல காட்டிக் கொண்டார். ( சந்திரமுகி ஜோதிகா கிட்டத் தட்ட சாய்பாபாவோடு பொறுந்திப் போகின்றார் )


அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலேயே குட்டிச் சாமியாரில் இருந்து புட்டிச் சாமியார் வரை மக்கள் நம்புகின்றனர் என்றால். படிப்பறிவே இல்லாத அக்கால மக்களைப் பற்றிக் கூற வேண்டுமா என்ன?

ஊர் ஊராக சுற்றிய சத்ய சாய் பாபா போகுமிடத்தில் இருக்கும் மாந்திர்கர்களை எல்லாம் சந்தித்து சித்து வேளைகளையும், மேஜிக்குகளைப் பழகினார். பரதேச வாழ்வில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு துணைக் கிடைப்பது எளிது. தமது தேவைகளை பிற சந்நியாசிகள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்.

18 வயதில் ஊருக்குத் திரும்பிய சத்ய சாய் படிப்பறிவே இல்லாத தமது கிராமத்தில் தாம் கற்ற சித்து வேளைகளை செய்துக் காட்டவும், தாமே சீரடி பாபா என்றதும் அவருக்குப் பின்னாள் ஒருக் கூட்டம் சேர்ந்தது. அதில் வரும் காணிக்கைகள் கொண்டு பிராசாந்தி நிலையம் என்ற ஒன்றை நிறுவினார். வட நாடுகளுக்குச் சென்ற சத்ய சாய் அங்கே இருக்கும் பல சாமியார்களை சந்தித்து நட்பு வட்டத்தைப் பெருக்கினார். காலப் போக்கில் அவரின் புகழ் பன்மடங்கு அதிகரித்தது. அதுவே பெரும் சாமியார் ராஜ்ஜியம் ஒன்றினை நிறுவ வழி வகுத்துக் கொடுத்தது.

பைசா பிரயோஜன் இல்லாதவன் என்ற சொந்தக் காரர்களின் வாயையும், தாயின் பின்னாள் அலைபவன், ஆண்மையற்றவன் என்ற தோழர்களின் பேச்சினையும், அழகில்லாதவன் என்ற ஊராரின் ஏச்சையும் தமது திறமையால் தடுத்து அனைவரையும் தமதுக் காலில் விழச் செய்தார். சந்நியாசிகள், பரதேசிகளாக இருக்கும் பலரின் ஓரினச் சேர்க்கைத் துணையை ஆசிரமத்திலேப் பெற்றார். அதனை பரிநிர்வாணம் எனவும், தெய்வ தன்மை என்றும் போதித்து தனி தர்சனம் என்றப் பெயரில் இன்பம் துய்த்தார். அதே நிலையில் ஆசிரமும் பிரபலமடைந்து உட்கார்ந்தே இடத்தில் சோறு கிடைத்தால் போதும் என்று நினைத்தவருக்கு கோடி கணக்கான செல்வம் குவியத் தொடங்கியது. மகானைப் போல உலாவிக் கொண்டார். 

ஆனால் இது வெகு காலம் நிலைக்கவில்லை. ஓரினச் சேர்க்கையில் தீராத் தாகம் கொண்ட இவர் 1990-களில் சத்ய சாய் கல்லூரிகளில் படித்த சில மாணவர்களோடு நெருக்கமாக இருந்துள்ளார். சில வேளைகளில் அவர்களுக்கு பணம் கொடுத்தார், சிலரை மிரட்டியும் வைத்தார். அப்படிப் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் குமுறலால் கொதிப்படைந்த சக மாணவர் சிலர் இவரைக் கொல்ல வந்தார்கள் ஆனால் நற்பயனாய் தப்பித்துக் கொண்ட இவர், தனது சகாக்களை ஏவி அந்த நான்கு மாணவர்களையும் நக்சலைட் என்று முத்திரைக் குத்தி எண்கவுண்டர் நடத்தி கணக்கை முடித்தார். அதன் பின் நடந்த தகிடுத் தந்தங்கள் யாவரும் அறிந்ததே.இவரின் சித்து வேளைகளை பல முறை பலர் எடுத்து கூறியும் நம்பாமல் இருந்தார்கள். ஆனால் இவர் செய்த மேஜிக் தூர்தர்சனில் தற்செயலாக வெளியாக் அம்பலமாகியதும், தனது பண அதிகார பலத்தால் அக்காட்சியை உடனேயே நிறுத்த செய்தார். பின்னர் இவர் மீதான ஓரினச் சேர்க்கையை பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டினை மையமாக வைத்து பிபிரி எடுத்த இரகசிய சுவாமி நிகழ்ச்சி இவரின் முகத்திரையை கிழித்தது. ஆனாலும் தனது அதிகாரத்தாலும், பணப் பலத்தாலும் அப்போதைய பாஜக இந்துவெறி அரசின் துணையோடும் அந்த நிகழ்ச்சிக்கு ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்தார். அதே போல சாய் பாபாவால் வன்புணரப் பட்டவர்கள் என்ற நிகழ்ச்சியை பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் மூலமாக உலகுக்குக் காடியது டென்மார்க் செய்தி நிறுவனம்.

ஆனால் பெரும் புள்ளிகள், அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள், கள்ள வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் என அனைவரோடும் சகலத் தொடர்புகளையும் பேணிய பாபாவை யாராலும் அசைக்க முடியவில்லை.......... தன்மீது சொன்னப் பழிகளை இயேசு  கிறித்துவின் மீது யூதாஸ் தொடுத்தப் பழிகளோடு ஒப்பிட்டு பிரச்சாரத்தில் இறங்கினார் பாபா. இன்றும் பாபாவின் பக்தர்கள் யாரிடமும் நீங்கள் இவற்றை எடுத்துக் கூறி விவாதித்தால் முதலில் அவர்கள் கூறுவது இயேசுவின் கதையைத் தான். அந்தளவுக்கு பிரச்சார உத்திகளால் மதிமயக்கம் பெற்றுள்ளார்கள் பலர். பாபாவின் பக்தர்களாக இருப்பவர்களி பெரும்பாலானோர் ப்ராமணர்களும், ஆதிக்கச் சாதி இந்துக்களுமே என்பது தனிக் கதையாகும்.

இப்படியான கள்ளச் சாமியாருக்கு தமிழகத்தின் பெரும் புள்ளிக் குடும்பமே சரணாகதியாகி உள்ளது தெரியுமா..

அந்தக் குடும்பம் வேறு யாரும் இல்லை கருணாநிதியும் அவரது மனைவி மக்கள் பேரன்கள் என அனைவருமே பாபாவின் விசுவாசிகள். இது இன்று நேற்றல்லா பல தசாப்தங்களாக என ஒரு தகவல் அறிந்த திமுக வட்டாரம் கூறியது. நாத்திகராக காட்டிக் கொள்ளும் கருணா பலமுறை அவரைப் புகழ்ந்துள்ளார். கிருஷ்ணா நதி நீரினை மேற்கோள் காட்டி அவரை சாமியார்களிலேயே நல்லச் சாமியார் என்று வருணித்தவர். அது மட்டுமின்றி பாபாவே கருணாநிதி வீடு தேடி வந்து ஸ்பெஷல் தர்ஷண் கொடுத்தவர். ஏன் நேற்று சண் டிவி பார்த்தவர்களுக்கு தெரியும் பாபாவின் மகிமைகளை சண் டிவி பிரச்சாரம் செய்தது. ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டு எதனைப் பற்றியும் மூச்சையும் விடவில்லை. 

நாட்டார் வழிப்பாடுகளிலும், நித்தியானந்தா, சங்கராச்சாரியார் போன்றோரின் திருட்டுத்தனதை அம்பலப்படுத்திய சண் டிவியின் இரட்டை வேடம் நன்கு புலப்பட்டு இருக்கும் உங்களுக்கு .........

ஒருவேளை நமது இந்திய சமூகம் கல்வி அறிவு பெற்றிருந்து, அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காது திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக் கொள்ள அனுமதி தந்திருந்தால் இந்த பாபாவின் வாழ்க்கை வேறுவிதமாய் மாறி இருந்திருக்கும் ......................
இந்தப் பதிவினை பலர் பிதற்றல்கள் எனப் புறந்தள்ளலாம், வசை மொழியலாம், இன்னும் வலைப்பதிவில் பகுத்தறிவு சூரியன்களாக விளங்கும் வாலாட்டும் கும்மியடிகளும் நேரே வந்து மாவாட்டலாம். என்ன வேணாலும் சொல்லிக்கோங்க போலிகளை நம்புவோ என்று 60 லட்சம் பேர் இருக்கலாம்.... ஆனால் இதில் உண்மை இல்லாமல் இல்லை என்று ஒருவரேனும் உணர்ந்தால் அதுவே போதும் எனக்கு ........
அந்த அப்பாவி நான்கு இளைஞர்களின் ஆத்மாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம் ..........

0 comments:

கருத்துரையிடுக