பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான மூர்த்தி கொடிதுவக்கு என்பவரின் பெலியத்தையிலுள்ள வீட்டின் மீதே இன்று அதிகாலை வேளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பெலியத்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆயினும் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக சேதமடைந்துள்ளன.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பிரஸ்தாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக