கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 17 மே, 2011

காலியில் கறுப்பு நிறமாக மாறிய கடல் நீர்! காரணம் ஜப்பான் அணுக் கழிவுகளா?

காலியின் களுவெல்ல பிரதேசத்தில் கடல் நீர் கறுப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடல் நீரின் நிறமாற்றத்திற்கு காரணம், ஜப்பான் அணுக்கழிவுகள் கடலில் கொட்டப்பட்டதன் தாக்கமாக இருக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 

கறுப்பு நிறமான கடல் நீருடன் எண்ணெய்த் தன்மையான ஒரு வகைப் படிவும் நீரில் அடித்து வரப்பட்டு கரையொதுங்கும் காரணத்தால் களுவெல்ல பிரதேசக் கடற்கரையோரம் மாசடைந்து காணப்படுகின்றது. 

சமுத்திரவியல் மாசுகட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், கடல் நீரின் கறுமைக்கும் அதனோடு சோ்ந்து கரையொதுங்கும் கழிவுகளுக்கும் எண்ணெய் அல்லது ஏதாவது இரசாயனம் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். 

காலி, களுவெல்லை பிரதேசத்தின் கடற்பரப்பில் சுமார் ஒரு ஏக்கர் வரையான பரப்பளவில் நீரானது கறுப்பு நிறமாக மாற்றமடைந்து மாசடைந்து காணப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக