கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 10 மே, 2011

பல்கலைக்கழக மாணவருக்கு மாவை. கோரிக்கை!


பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவ, பொலிஸ் பிரசன்னத்துக்கு இடமளிக்காத வகையில் செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மாவை சேனாதிராசா.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக் கிடையிலான மோதல் செய்திகள் எமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றன. எதிர்காலத்தில் தலைமைத்துவத்தை ஏற்று, பாரம்பரியத்தைக் காத்து, முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய மாணவர்கள் பொறுமையுடன் தமது பிரச்சினைகளைத் தாமே தீர்க்கவேண்டும்.

பொலிஸ், இராணுவ பிரசன்னத்துக்கும் தலையீட்டுக்கும் இடமளிக்காமல் பல்கலைக்கழக செயற்பாடுகளைத் தொடரவேண்டும் என்று அவர் நேற்று விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக