கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சனி, 14 மே, 2011

முற்றுகிறது கருணா - பிள்ளையான் மோதல்! நேற்றும் ஒருவர் பலி

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானின் ஆதரவாளர் ஒருவரே நேற்று இரவு மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 


மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடிப் பகுதியில் முருகேசு இளங்குமரன் என்ற வர்த்தகரே நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர் என கட்சியின் பேச்சாளர் ஆசாத் அலி உறுதிப்படுத்தியுள்ளார். 

மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை பிரதி அமைச்சர் கருணாவின் இணைப்பாளரான மதியழகன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்று நாட்களுக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பிரதியமைச்சர் கருணா அம்மானுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் நீண்ட காலமாக முரண்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக