கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சனி, 14 மே, 2011

அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிராக 30 நாடுகளில் வழக்குத் தொடர புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முயற்சி


அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிராக 30 நாடுகளில் வழக்குகளைத் தொடர்வதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிரான வழக்குகளைத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.

தற்போதைக்கு மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசியாக்கண்டத்தின் சில நாடுகளிலும் அவ்வாறான வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் பிரஸ்தாப அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் சிலரும், நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் அவர்களுக்கான ஆதரவை வழங்க முன்வந்துள்ள அதே வேளை, ஆரம்ப கட்டமாக இலங்கையின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஒரு சில நாடுகளில் தற்போதைக்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

0 comments:

கருத்துரையிடுக