கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

ஞாயிறு, 8 மே, 2011

வவு. குருமன்காட்டுப் பகுதியில் ஆசிரியர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்


வவுனியா குருமண்காட்டுப் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டின் மீது இன்று காலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா மன்னார் வீதி யூசி குவாட்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள விபுலானந்தாக் கல்லூரியின் பொருளியல் ஆசிரியரான வீ. ரங்கநாதன் என்பவரின் வீட்டின் மீதே இன்று அதிகாலை 5.45 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
வீட்டு மதிலுக்கு மேலாக எறியப்பட்ட கைக்குண்டு வீட்டின் முன்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது வீழ்ந்து வெடித்துள்ளது. இத்தாக்குதலினால் மோட்டார் சைக்கிளும், வீட்டு ஜன்னல்களும் சேதமடைந்துள்ளன.

இந்த ஆசிரியருக்கு எதிராக பாடசாலையில் இரகசியமாக ஒட்டப்பட்டிருந்த துண்டுப் பிரசுரத்தின் பிரதிகளும் இந்த கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்தின்போது வீசப்பட்டிருந்தன.
அவற்றில் ஒன்றில் பேனையால் “ஈழம் மரணம் நிச்சயம்” என எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் இடம்பெற்ற பிரச்சினை ஒன்றிற்காக நடத்தப்பட்ட இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் தமது வீட்டின் படலையை திறந்துவிட்டு வீட்டுக்குள் செல்லும் போதே மோட்டார் சைக்களில் வந்தோர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
நீண்ட நாட்களின் பின்னர் இடம்பெற்றுள்ள இந்த குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஸ்தலத்திற்கு விரைந்துசென்ற வவுனியா பொலிஸாரும், இராணுவத்தினரும்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக