கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 17 மே, 2011

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அமெரிக்காவில் ஒபாமா, ஹிலாரி கலந்து கொள்ளலாம்! மகிந்த கலக்கம்..!



இலங்கை இனவாத சிங்கள அரசினால் சிறுபான்மைத் தமிழர்கள் அவர்தம் விடுதலைக்காக போராடிய மக்கள் எண்பதாயிரம் பேர் வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி தமிழினத்தை அழித்தது ஹிட்லர் மகிந்த ராஜபக்ச அரசு.

இதே காலப் பகுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற தலைமை செயலர் பதவி தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக ஒபாமா தமிழர் அமைப்பு என ஒன்று உருவாக்கம் பெற்று பெரும் பங்காற்றியது .



இதன் அடிப்படையில் இம்முறை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்கநாளில் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், சட்டாமா அதிபர்கள், ரொபேர்ட் பிளேக் போன்றவர்கள் கலந்து கொண்டு அந்த மக்களின் துயரில் பங்கேற்று கொள்வதுடன் ஐ.நாவினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .



இந்த நிகழ்வில் முக்கிய சிறப்பாளராக முன்னாள் ஐ.நாவுக்கான பேச்சாளர் கலந்து கொள்ள உள்ளதும் அவர் அங்கு மேலும் பல தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது .



இந்த ஒருங்கிணைப்பு பணிகளை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் நேரடியாக செய்து வருவதாக சிங்கள உளவு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டு பரப்பரை ஏற்படுத்தியுள்ளது .



நாடு கடந்த தமிழீழ அரசினை முடக்கி அதன் கட்டமைப்பை சீர்குலைக்க இலங்கை அரசு பலத்த முயற்சி எடுத்து வருவதும் அதன் பின் புலத்தில் தமிழர்களை வைத்து அதற்கான மோதல்களை உருவாக்கி சீர்குலைவு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதை அண்மைக்காலச் சம்பவங்கள் பல கோடிட்டு காட்டுகின்றன.



இந்த முக்கியமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால் நாடு கடந்த அரசு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாக திகழும் என்பதும் உலகளாவிய ரீதியில் இவை தமிழர்களின் விடுதலைப் போருக்கு கிடைத்த முதல் வெற்றியுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக