கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

திங்கள், 16 மே, 2011

போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி

பாலஸ்தீன எல்லைப் பகுதியில் சில குழுவினர் போராட்டத்தில் ஈடுட்டனர். இந்த போராட்ட நபர்கள் மீது இஸ்ரேலிய துருப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
துப்பாக்கி தாக்குதலில் 12 பேர் இறந்தனர். ஏராளமானர்கள் காயம் அடைந்தார்கள். பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சிரியா வழியாக கோல்டன் ஹை பகுதியில் நுழைய முயன்றனர் என இஸ்ரேல் கூறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யகு கூறுகையில்,"நமது எல்லைப் பகுதியையும் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டிய உறுதியில் உள்ளோம். அமைதி விரைவில் திரும்பும்" என்றார்.
கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பின்னர் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் எல்லைப் பகுதியில் போராடுகிறார்கள்.
இந்த நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்பாக நடந்த எதிர்ப்பு போராட்டக் கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு இருப்பதால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோல்டன் ஹை பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய துருப்பினர் மீது பாலஸ்தீன போராட்டக்காரர்கள் கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். மஜ்தால் ஷாம்ஸ் என்ற கிராமத்தின் அருகே போராட்டக்காரர்கள் வேலியை கடந்து செல்ல முயன்றனர்.
கடந்த 1967ம் ஆண்டு நடந்த 6 நாள் போரின் போது சிரியாவின் எல்லைப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரேலின் அத்து மீறலை கண்டித்து தற்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன.

0 comments:

கருத்துரையிடுக