இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்த தகவலை லக்பிம செய்திதாள் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தரப்புக்களை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன, ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை சந்தித்துள்ளார்.
இதன்போது இந்த அறிக்கையில் சுட்டிக்;காட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய குழு ஒன்றை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் இணைந்ததாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது.
அதனை தவிர இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக இந்தக்குழு கண்டறிந்தால் அது தொடாபிலான விசாரணைகளையும் முன்னெடுக்கும் என்றும பாலித கோஹனவும் பான் கீ மூனும் இணங்கியுள்ளனர்.
அதேநேரம் நிபுணர் குழுவின் அறிக்கையில் வேறு பல விடயங்களையும் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம்;, சிங்கள மக்களுக்கு ஒன்றையும் சர்வதேசத்துக்கு ஒன்றையும் கூறிவருவதாக ஜே வி பி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்த்க்கது
0 comments:
கருத்துரையிடுக