கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

ஞாயிறு, 15 மே, 2011

தொலைக்காட்சியில் தோன்றிய கடாபி: சர்ச்சை தீர்ந்தது

லிபியாவில் நேட்டோ படைகளின் கடுமையான தாக்குதலை தொடர்ந்து கடாபி பற்றிய தகவல்கள் வெளியாகாமல் இருந்தன.
இந்நிலையில் திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் பழங்குடியின தலைவர்களை கடாபி சந்தித்து பேசியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
லிபியாவில் கடாபியை எதிர்த்து கடந்த மூன்று மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் 30ம் திகதி திரிபோலியில் உள்ள கடாபியின் வீடு மீது நேட்டோ படைகள் நடத்திய பயங்கர தாக்குதலில் கடாபியின் இளைய மகன் மற்றும் மூன்று பேர குழந்தைகள் பலியாயினர். இந்நிலையில் கடாபி உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்த சர்ச்சை நீடித்து வந்தது.
சர்ச்சையை தீர்க்கும் வகையில் கடந்த புதன்கிழமை திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் பழங்குடியின தலைவர்களை கடாபி சந்தித்து பேசியது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அல் ஜமாஹிரியா என்ற தொலைக்காட்சியில் பழங்குடியின தலைவர்களுடன் கடாபி உரையாடுவது போன்ற காட்சி காட்டப்பட்டது. அப்போது,"லிபியன் பழங்குடியினரின் பிரதிநிதிகள் நாம் என்பதை உலகிற்கு காட்டுவோம்" என்று கடாபி கூறினார். பதிலுக்கு கூட்டத்தில் இடம் பெற்ற பழங்குடியின பெரியவர் ஒருவர், "நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்று கடாபியை பார்த்து கூறினார்.
கூட்டத்தை முன்னிட்டு ஹோட்டலின் சில அறைகள் சீல் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஹோட்டலில் கடாபியின் தலைமையில் கூட்டம் நடைபெறுவதை அறிந்த நேட்டோ படையினர் அதன் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் ஹோட்டலின் ஜன்னல்கள் பழுதடைந்தன. லிபியா கிளர்ச்சியாளர்களுக்கு உதவ அமெரிக்கா 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்து இருந்தது. இதில் ஒரு பாகமாக முதன் முதலாக கிளர்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட உணவு பொட்டலங்கள் லிபியா வந்து சேர்ந்தன.

0 comments:

கருத்துரையிடுக