கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 24 மே, 2011

யாழ். சித்த மருத்துவ விடுதிக்குள் நுழைந்த திருடன் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம்!


யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை விடுதிக்குள் சென்ற திருடன்  மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பிடிக்க வேண்டிய நிலையேற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கைதடியிலுள்ள சித்த மருத்துவ விடுதிக்குள் நுழைந்த திருடன் அங்கு தங்கியிருந்த பெண் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை அபகரித்துள்ளார்.
இதைக் கண்ணுற்ற மற்றைய பெண் ஒருவர் விடுதியின் காவலாளிக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்க முற்பட்டபோது காவலாளி தூக்கத்தில் இருந்தமையால் அருகிலுள்ள இராணுவத்தினரிற்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத்தினர் திருடனைப் பிடிக்க முற்பட்ட போது விடுதி மேல் ஏறி தப்பிக்க முயற்சித்தமையால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த நபர் கைகளில் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதமும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக