கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சனி, 7 மே, 2011

யாழில் மீளக் குடியேறிய மக்களின் விபரங்களை திரட்டும் இராணுவப் புலனாய்வாளர்கள்!


யாழ் குடாநாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் குடியேறியுள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் தோன்றியிருப்பதாக மீள் குடியேறிய பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மீள் குடியேறியுள்ள பகுகளில் இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் சென்று குடும்பங்களின் விபரங்களை எடுத்துச் செல்வதுடன், அப்பகுதிகளுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்தால், உடனடியாக புலனாய்வுப் பிரிவினர் சென்று, மக்களுடன் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறிந்து கொள்வதாக தெரியவருகிறது.
அண்மையில் வலிகாமம் வடக்குப் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மக்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர், அப்பகுதிக்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவர்கள் தொடர்பான விடயங்களை பொதுமக்களிடம் விசாரித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக