கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வெள்ளி, 6 மே, 2011

பெருமளவிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்படவில்லை : பிரதமர்

விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிக் குறிப்பிடாமல் நாட்டின் பாதுகாப்புக் குறித்து பேச முடியாத நிலை இன்னும் தொடர்வதாக பிரதமர் டி.எம்.ஜயரத்தின தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விட்டு வெளிநாடு சென்றுள்ள மற்றும் இன்னும் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காது மறைந்து வாழ்கின்ற புலனாய்வு மற்றும் தாக்குதல் படை உறுப்பினர்கள் முன்னைய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணையில் கலந்து கொண்டு நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளிலிருந்து தற்போதைக்கு நாடு முழுமையாக மீட்கப்பட்டுள்ள போதிலும், யுத்தத்தின் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட பின்விளைவுகளின் பாதிப்புக்கள் நாட்டில் இன்னும் புரையோடிப் போயுள்ளன.

முப்பத்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக நாட்டைப் பிடித்தாட்டிக் கொண்டிருந்த பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளின் ஸ்தாபர்களான விடுதலைப்புலிகள் அமைப்புக் குறித்துக் குறிப்பிடாது நாட்டின் பாதுகாப்புக் குறித்துப் பேசமுடியாத நிலை இன்னும் தொடர்கின்றது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நாட்டின் தென்பிரதேசங்களுக்குத் தப்பி வந்த பெருந்தொகையான விடுதலைப் புலி உறுப்பினர்களில் கணிசமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பெருமளவானவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்புக்குப் பொருத்தமான வழிமுறைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் நன்கறிந்து வைத்துள்ளதுடன் அதற்கேற்றவாறே அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக