கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

கைத் தொலைபேசிக்காக 17 வயது யுவதி தற்கொலை!!


பருத்தித்துறையில் தனது சகோதரி தனக்கு வந்த குறுந்தகவல்களை வாசிப்பதைப் பார்த்து கைத்தொலைபேசியை சகோதரியிடம் இருந்து பறிப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் தோல்வியுற்ற யுவதி மண்ணெய் ஊற்றி எரிந்துள்ளார்.

தனக்கு வந்திருந்த குறுந்தகவல்களை தனது சகோதரி பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அதனால் அதனை பறிப்பதற்காக முயன்ற வேளை அது தோல்வியுற்றதால் சகோதரியை எச்சரிப்பதற்காக தனது உடலில் மண்ணெய் ஊற்றியதாகவும் அப்போதும் சகோதரி தொலைபேசியை கொடுக்க மறுத்த காரணத்தால் விளையாட்டாக உடலில் நெருப்பு வைத்ததாகவும் தெரியவருகின்றது.

உடனடியாக கைத் தொலைபேசி வைத்திருந்த சகோதரியும் பெற்றோரும் அலறியபடி யுவதியின் நெருப்பை அணைத்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதித்து நேற்று முந்தினம் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.

பருத்தித்துறை மணல் வீதியைச் சேர்ந்த வின்சன்மெடோன் றொன்சியா வயது 17 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

0 comments:

கருத்துரையிடுக