கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஆண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 3 பெண்கள் கைது: சிம்பாவேயில் சம்பவம்

சிம்பாவ்வேயில் ஆண்களுக்கு மயக்க மருந்தை வழங்கி அவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விந்தணுக்களை திருடிய குற்றச்சாட்டில் 3 பெண்களை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

 கவேரு நகரில் வாகனமொன்றில் சென்ற வேளை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். 


அவர்களின் வாகனத்திலிருந்து உபயோகிப்பட்ட 33 கருத்தடை உறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த பெண்கள் ஹரேரே மாஷோலைன்ட் மற்றும் குவேறு ஆகிய நகர்களில் தெருவில் செல்லும் ஆண்களை தமது வாகனத்தில் ஏற்றி அனுமதித்த பின் அவர்களை மயக்க மருந்து கொடுத்து தமது காரியத்தை சாதித்து வந்துள்ளனர். 

இந்தப் பெண்கள் குறிப்பிட்ட ஆண்கள் மயக்கம் தெளிந்ததும் அவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளனர். 

அந்த ஆண்களிடமிருந்து விந்தணுக்களை சேகரித்த பின் அந்தப் பெண்கள் அவர்களை தெருவோரத்தில் கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர். 

ஆண்களின் விந்தணுக்கள் மூலம் தாம் அதீத மந்திர ஆற்றல்களைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த பெண்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட மூவரில் கோபி நகோவரா என்ற 26 வயது யுவதியும் உள்ளடங்குகிறார். 

ஆண்களைக் கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படத்திய குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக பாதசாரியொருவரை வாகனத்தால் மோதி அவர் பலியாவதற்கு காரணமாக இருந்தமை தொடர்பாக பிறிதொரு வழக்கும் பதிவாகியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக